என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வீட்டுமனை தகராறில் ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கி கொலை மிரட்டல்
புதுச்சேரி:
கொம்பாக்கம் பேட் புதுநகரை சேர்ந்தவர் கலைவாணன் (வயது46). இவர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி எதிரே சொந்தமாக ஆம்புலன்ஸ் வாங்கி ஒட்டி வருகிறார்.
இவருக்கும் இவரது தம்பி ஆரோனுக்கும் சொந்தமாக ஓதியம்பட்டு ஜெய்கிருஷ்ணா நகரில் வீட்டுமனை உள்ளது. சம்பவத்தன்று அந்த வீட்டு மனையை கொம்பாக்கம்பேட் புதுநகரை சேர்ந்த ரத்தினவேலு(59) என்பவர் ஜே.சி.பி. எந்திரத்தால் அங்குள்ள முட்செடிகளை அகற்றிக்கொண்டிருந்தார்.
இதனை கலைவாணன் தட்டிக்கேட்டார். அப்போது ரத்தினவேலு அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து கலைவாணன் தலையில் ஓங்கி அடித்தார். மேலும் கலைவாணனை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த ரத்த வெள்ளத்தில் மயங்கிபோன கலைவாணனை அவரது தம்பி ஆரோன் மற்றும் அங்குள்ளவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கலைவாணன் சிகிச்சை பெற்ற வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரத்தினவேலை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்