search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் பார்
    X
    டாஸ்மாக் பார்

    ஈரோடு மாவட்டத்தில் 128 டாஸ்மாக் பார்கள் மூடல்

    ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 128 டாஸ்மாக் பார்கள் நேற்று முதல் மூடப்பட்டன.
    ஈரோடு:

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகளில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டி தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த வாரம் முதல் விற்பனை நேரம் குறைக்கப்பட்டு மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருகிறது.

    மேலும் முழு ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் டாஸ்மாக் கடையோடு செயல்படும் பார்களை மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 128 டாஸ்மாக் பார்கள் நேற்று முதல் மூடப்பட்டன.

    ஈரோடு ரெயில் நிலையம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மணிமொழி நேற்று ஆய்வு செய்தார். அப்போது சமூக இடைவெளியை கடைபிடித்து கடைக்கு வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்று அவர் கடை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    டாஸ்மாக் கடைகளில் மது நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், கூட்டம் அதிகமாக காணப்பட்டால் டோக்கன் முறையில் மது விற்பனை செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×