என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யத்தில் இன்று காலை சூறைகாற்றுடன் கனமழை
Byமாலை மலர்27 April 2021 4:13 AM GMT (Updated: 27 April 2021 4:13 AM GMT)
வேதாரண்யத்தில் சுமார் 2 மணி நேரம் நீடித்த மழையால் இதமான சூழல் நிலவியது. 40.2 மி.மீ. மழை அளவு பதிவானது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வந்தது. இரவு வரை வெப்பத்தின் தாக்கம் இருந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. சிறிது நேரத்தில் சூறை காற்றாக மாறி மழை பெய்ய தொடங்கியது.. நேரம் செல்ல செல்ல இடியுடன் கனமழையாக மாறியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
சுமார் 2 மணி நேரம் நீடித்த மழையால் இதமான சூழல் நிலவியது. 40.2 மி.மீ. மழை அளவு பதிவானது.
இந்த மழை வேதாரண்யம் நகரில் மட்டுமே கருணை காட்டியது. புறநகர் பகுதிகளில் மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X