என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
Byமாலை மலர்25 April 2021 1:12 PM GMT (Updated: 25 April 2021 1:12 PM GMT)
காரைக்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி:
காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 48) இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டுமுன் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய அவர் புறப்பட்டுச் சென்றபோது வழியில் தனது மோட்டார் சைக்கிளை 2 பேர் தள்ளிக் கொண்டு போவதைக் கண்டார். உடனடியாக அவர்களை வழிமறித்து பிடிக்க முற்பட்டபோது ஒருவன் தப்பி ஓடிவிட்டான். மற்றொருவன் பிடிபட்டான். பிடிபட்டவன் பெயர் திருப்பதி (வயது19) காளவாய்பொட்டல் பகுதியை சேர்ந்தவன். திருப்பதி வடக்கு போலீசில் ஒப்படைக்கப்பட்டான். போலீசார் திருப்பதி மீது மோட்டார் சைக்கிளை திருடியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றொருவனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X