search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மீன்சுருட்டி அருகே மது விற்ற 2 பேர் கைது

    மீன்சுருட்டி அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நடத்திய சோதனையில், மீன்சுருட்டி அருகே உள்ள அய்யப்பன் நாயகன்பேட்டை கிழக்கு தெருவை சேர்ந்த கலைச்செல்வன்(வயது 58), தனது வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து கலைச்செல்வனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 9 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் இளையபெருமாள் நல்லூர் காலனி தெருவை சேர்ந்த சங்கர்(46) தனது வீட்டின் பின்புறம் மது விற்றதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 3 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×