என் மலர்
செய்திகள்

கோப்பு படம்.
அருப்புக்கோட்டை அருகே காயங்களுடன் முதியவர் பிணம்
கடம்பன்குளம் கண்மாய் அருகே 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி கடம்பன்குளம் கண்மாய் அருகே 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காயங்களுடன் இறந்து கிடப்பதாக அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவரை யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது உடல்நிலை சரியில்லாமல் இறந்தாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






