என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விளாங்குடியில் லாரி கவிழ்ந்ததில் சாலையில் சிதறி கிடந்த கோதுமை மூட்டைகள்
Byமாலை மலர்24 April 2021 10:09 AM GMT (Updated: 24 April 2021 10:09 AM GMT)
விளாங்குடியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்ததில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணா. டிரைவரான இவர் தஞ்சாவூரில் இருந்து லாரியில் 600 கோதுமை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக அங்குள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு சென்று கொண்டிருந்தார்.
நேற்று மாலை விளாங்குடியை கடந்து அந்த லாரி சென்றது. அப்போது அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெறுவதால், எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடும் விதமாக லாரியை டிரைவர் கருணா திருப்பியுள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த கோதுமை மூட்டைகள் சாலையில் விழுந்து சிதறி கிடந்தன. மேலும் டிரைவர் கருணா படுகாயமடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் சாலையில் சிதறி கிடந்த கோதுமை மூட்டைகளை வேறு லாரியில் ஏற்றி ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் திருச்சி-சிதம்பரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் ஏற்பட்டது. இது குறித்து கயர்லாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணா. டிரைவரான இவர் தஞ்சாவூரில் இருந்து லாரியில் 600 கோதுமை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக அங்குள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு சென்று கொண்டிருந்தார்.
நேற்று மாலை விளாங்குடியை கடந்து அந்த லாரி சென்றது. அப்போது அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெறுவதால், எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடும் விதமாக லாரியை டிரைவர் கருணா திருப்பியுள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த கோதுமை மூட்டைகள் சாலையில் விழுந்து சிதறி கிடந்தன. மேலும் டிரைவர் கருணா படுகாயமடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் சாலையில் சிதறி கிடந்த கோதுமை மூட்டைகளை வேறு லாரியில் ஏற்றி ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் திருச்சி-சிதம்பரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் ஏற்பட்டது. இது குறித்து கயர்லாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X