என் மலர்
செய்திகள்

கோவிஷீல்டு
கூடுதலாக தேவைப்படும் நிலையில் 10,500 டோஸ் கோவிஷீல்டு மருந்து மட்டுமே வந்துள்ளது - உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 95 மையங்கள் மூலம் போடப்பட்டு வருகிறது. இதில் 35 மையங்கள் நிரந்தர மையங்கள் ஆகும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்திற்கு 10,500 டோஸ் கோவி ஷீல்டு தடுப்பூசி மருந்து வந்துள்ள நிலையில் அடுத்த 2 நாட் களுக்கு மட்டுமே இந்த மருந்து பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதல் மாவட்ட நிர்வாகம் கூடுதல் டோஸ் தடுப்பூசி மருந்துகளை பெறு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 95 மையங்கள் மூலம் போடப்பட்டு வருகிறது. இதில் 35 மையங்கள் நிரந்தர மையங்கள் ஆகும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது. தினசரி 4000 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
அதில் 2-வது டோஸ்போட வேண்டியவர்களுக்கும் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2-வது டோஸ் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் போடாவிட்டால் முதலாவது டோஸ் போட்ட பலன் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் மாவட்ட மக்களிடையே உள்ளது. 10,500 டோஸ் மாவட்டத்திற்கு மாநில சுகாதாரத் துறையால் 10,500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து அனுப்பப்பட்டு உள்ளது.
ஏற்கனவே தடுப்பூசி மையங்களுக்கு வந்து தடுப்பூசி போட முடியாமல் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளவர்களே 10 ஆயிரத்துக்கும்மேல் உள்ள நிலையில் இந்த தடுப்பூசி மருந்தை கொண்டு அடுத்த இரண்டு நாட்கள் மட்டுமே தடுப்பூசி போட வாய்ப்பு ஏற்படும். அதன் பின்னர் பதிவு செய்தவர்களுக்கும் 2-வது தவணை தடுப்பூசி போடவேண்டியவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு வாய்ப்பு இல்லாதநிலை ஏற்படும். மேலும் கோவாக்சின் மருந்து தட்டுப்பாடு உள்ள நிலையில் 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் உள்ள 95 தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி போடுவதற்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது. ஏற்கனவே மாநிலத்திற்கு 6 லட்சம் கோவிஷீல்டு மருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்திற்கு கூடுதலாக தடுப்பூசி மருந்து டோஸ்களை அனுப்பி வைக்க மாநில சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டத்திற்கு 10,500 டோஸ் கோவி ஷீல்டு தடுப்பூசி மருந்து வந்துள்ள நிலையில் அடுத்த 2 நாட் களுக்கு மட்டுமே இந்த மருந்து பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதல் மாவட்ட நிர்வாகம் கூடுதல் டோஸ் தடுப்பூசி மருந்துகளை பெறு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 95 மையங்கள் மூலம் போடப்பட்டு வருகிறது. இதில் 35 மையங்கள் நிரந்தர மையங்கள் ஆகும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது. தினசரி 4000 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
அதில் 2-வது டோஸ்போட வேண்டியவர்களுக்கும் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2-வது டோஸ் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் போடாவிட்டால் முதலாவது டோஸ் போட்ட பலன் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் மாவட்ட மக்களிடையே உள்ளது. 10,500 டோஸ் மாவட்டத்திற்கு மாநில சுகாதாரத் துறையால் 10,500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து அனுப்பப்பட்டு உள்ளது.
ஏற்கனவே தடுப்பூசி மையங்களுக்கு வந்து தடுப்பூசி போட முடியாமல் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளவர்களே 10 ஆயிரத்துக்கும்மேல் உள்ள நிலையில் இந்த தடுப்பூசி மருந்தை கொண்டு அடுத்த இரண்டு நாட்கள் மட்டுமே தடுப்பூசி போட வாய்ப்பு ஏற்படும். அதன் பின்னர் பதிவு செய்தவர்களுக்கும் 2-வது தவணை தடுப்பூசி போடவேண்டியவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு வாய்ப்பு இல்லாதநிலை ஏற்படும். மேலும் கோவாக்சின் மருந்து தட்டுப்பாடு உள்ள நிலையில் 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் உள்ள 95 தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி போடுவதற்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது. ஏற்கனவே மாநிலத்திற்கு 6 லட்சம் கோவிஷீல்டு மருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்திற்கு கூடுதலாக தடுப்பூசி மருந்து டோஸ்களை அனுப்பி வைக்க மாநில சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Next Story






