என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்
புதுச்சேரி:
விடுதலை சிறுத்தை கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உயிர்க்கொல்லி கொரோனா பெருந் தொற்றின் 2-வது அலையால் நாடு முழுவதும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதோடு வரலாறு காணாத வகையில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதுவையிலும் 19 நாட்களில் 25 பேருக்கு மேல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
புதுவைஅரசும், கவர்னரும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க ஒரு வார காலம் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதோடு அதற்கு முன்பு மக்களின் வறுமையை போக்க ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் மற்றும் 30 கிலோ அரிசியும் வழங்க வேண்டும்.
கொரோனா நோயை கட்டுப்படுத்த செலுத்தும் தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடம் ஏற்படும் சந்தேகங்களை போக்க மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்