search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    விருதுநகர் அருகே வேன்-கார் மோதல்: கர்ப்பிணி உள்பட 5 பேர் படுகாயம்

    விருதுநகர் அருகே வேன்-கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த கர்ப்பிணி உள்பட 5 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள சென்னல்குடியைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது 22). கர்ப்பிணியான இவருக்கு கணவர் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி முடிந்து மணிமேகலை தனது உறவினர்களுடன் சாத்தூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வேனில் புறப்பட்டார்.

    சென்னல்குடி ரோட்டில் வேன் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் வேன் மீது மோதியது. இதில் வேனில் இருந்த மணிமேகலை, ராமச்சந்திரன் (50), மாரீஸ்வரி (40), கருப்பசாமி (32) மற்றும் கார் டிரைவர் சூர்யா (23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது பற்றிய புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×