என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம்
சீர்காழி:
சீர்காழியில் வணிகர் சங்கங்கள், திருமண மண்டபம், தியேட்டர், மருந்தகம், உணவங்களின் உரிமையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.
தாசில்தார் ஹரிதரன், கோட்டாசியரின் நேர்முக உதவியாளர் சண்முகம், தேர்தல் துணை தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன் (சீர்காழி), அருண்(கொள்ளிடம்), சீர்காழி இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சப்-கலெக்டர் நாராயணன் பேசுகையில், வணிக நிறுவனங்களில் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் முககவசம் அணிதிருக்கவேண்டும். கடையில் வரும் வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி, சோப்புகொண்டு கைகளை கழுவிட வசதிகள் செய்திருக்கவேண்டும். முககவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்ககூடாது.
அதேபோல் முககவசம் அணியாத வணிக நிறுவனங்களுக்கு ரூ.200அபராதமும், சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும். தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். திருமண மண்டபங்களில் சமூக இடைவெளியுடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மண்டபங்களை பயன்பாட்டிற்கு விடவேண்டும். விதிமுறைகளை மீறினால் ரூ5ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்