search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம்

    திருமண மண்டபங்களில் சமூக இடைவெளியுடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மண்டபங்களை பயன்பாட்டிற்கு விடவேண்டும். விதிமுறைகளை மீறினால் ரூ5ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.

    சீர்காழி:

    சீர்காழியில் வணிகர் சங்கங்கள், திருமண மண்டபம், தியேட்டர், மருந்தகம், உணவங்களின் உரிமையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

    தாசில்தார் ஹரிதரன், கோட்டாசியரின் நேர்முக உதவியாளர் சண்முகம், தேர்தல் துணை தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன் (சீர்காழி), அருண்(கொள்ளிடம்), சீர்காழி இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சப்-கலெக்டர் நாராயணன் பேசுகையில், வணிக நிறுவனங்களில் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் முககவசம் அணிதிருக்கவேண்டும். கடையில் வரும் வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி, சோப்புகொண்டு கைகளை கழுவிட வசதிகள் செய்திருக்கவேண்டும். முககவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்ககூடாது.

    அதேபோல் முககவசம் அணியாத வணிக நிறுவனங்களுக்கு ரூ.200அபராதமும், சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும். தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். திருமண மண்டபங்களில் சமூக இடைவெளியுடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மண்டபங்களை பயன்பாட்டிற்கு விடவேண்டும். விதிமுறைகளை மீறினால் ரூ5ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.

    Next Story
    ×