என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தூர் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி பலி
Byமாலை மலர்16 April 2021 7:12 AM GMT (Updated: 16 April 2021 7:12 AM GMT)
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார் என்ற சுகுமார் (வயது 48), கூலித்தொழிலாளி. இவருக்கு சுமதி (43) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருடன் சுமதி தனது குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குமார் மது பழக்கத்துக்கு அடிமையானார். சரியாக வேலைக்கும் செல்லவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் சுகுமார் மயங்கிக்கிடந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர் வீரமணி உடனே சுகுமாரை சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X