என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை- குடிநீர் தேக்க ஏரி நிரம்பியது
Byமாலை மலர்16 April 2021 6:56 AM GMT (Updated: 16 April 2021 6:56 AM GMT)
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டியது.
ராஜபாளையம்:
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டியது.
இதனால் ராஜபாளையத்துக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் 6-வது மைல் குடிநீர் தேக்க ஏரி அதன் முழு கொள்ளளவான 18 அடியை எட்டி நிரம்பியது. மழை காரணமாக அய்யனார் கோவில் ஆறு, முள்ளியாறு, பேயனாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இதேபோல் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. தேவதானம் பகுதியில் பெய்த மழையால் சாஸ்தா கோவில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திடீர் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டியது.
இதனால் ராஜபாளையத்துக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் 6-வது மைல் குடிநீர் தேக்க ஏரி அதன் முழு கொள்ளளவான 18 அடியை எட்டி நிரம்பியது. மழை காரணமாக அய்யனார் கோவில் ஆறு, முள்ளியாறு, பேயனாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இதேபோல் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. தேவதானம் பகுதியில் பெய்த மழையால் சாஸ்தா கோவில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திடீர் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X