என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னூரில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்15 April 2021 10:59 AM GMT (Updated: 15 April 2021 10:59 AM GMT)
குன்னூரில் குடும்ப தகராறு காரணமாக மனவேதனை அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 27). தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணேசனுக்கும், ரேணுகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணேசன் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து திடீரென விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் கணேசனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கணேசன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 27). தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணேசனுக்கும், ரேணுகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணேசன் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து திடீரென விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் கணேசனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கணேசன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X