search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வரதட்சணை கொடுமை- பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கணவரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 36). இவர் பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கடலூர் அருகே ஆலப்பாக்கம் அடுத்த சீனுவாசபுரத்தை சேர்ந்த யோக பிரியா (28) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் நிரஞ்சன் என்ற மகன் உள்ளான். கடந்த சில மாதங்களாக ரமேஷ் தனது பெற்றோருடன் சேர்ந்து யோக பிரியாவிடம், அவரது பெற்றோர் வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் யோகபிரியா கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி ரமேஷ் வீட்டுக்கு மீண்டும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ரமேஷ் மீண்டும் வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த யோகபிரியா நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். மேலும் யோகபிரியாவுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளே ஆவதால், அவரது சாவு குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    Next Story
    ×