search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மயிலாடுதுறை அருகே மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

    மயிலாடுதுறை அருகே மனநலம் பாதித்த 26 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே பெரம்பூர் தெற்கிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பந்தம் மகன் ராஜே‌‌ஷ்(வயது 26). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட 26 வயது பெண்ணை கர்ப்பிணியாக்கியதாக தெரிகிறது. அந்த பெண் உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்த பெண் 7 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

    மனநலம் சரியில்லாத அந்தப் பெண் கர்ப்பமானதற்கு ராஜே‌‌ஷ்தான் காரணம் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மனநலம் பாதித்த பெண்ணின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
    Next Story
    ×