search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
    X
    பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

    பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்

    வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சார்பில் வில்லியனூர், கணுவாப்பேட்டை பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இலவச கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
    வில்லியனூர்:

    புதுவை மாநிலத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தடுப்பூசி முகாமின்போது பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சார்பில் வில்லியனூர், கணுவாப்பேட்டை பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இலவச கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் சித்த மருத்துவ டாக்டர் ஹேமலதா கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×