என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்லியனூரில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்11 April 2021 5:34 PM GMT (Updated: 11 April 2021 5:34 PM GMT)
கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர்:
வில்லியனூர் வசந்தம் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பூமிநாதன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவலட்சுமி (வயது 25). பூமிநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் இரவு பூமிநாதன் மது குடிக்க சிவலட்சுமியிடம் பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சிவலட்சுமி வீட்டில் உள்ள ஊஞ்சல் கொக்கியில் தூக்குப்போட்டு தொங்கினார்.
இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சிவலட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X