search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீன்கள்
    X
    மீன்கள்

    61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் 15-ந்தேதி தொடங்குகிறது

    கடலுக்கு படகுகளுடன் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் வருகிற 14-ந்தேதி இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
    புதுச்சேரி:

    கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் வருகிற ஏப்ரல் 15-ந்தேதி தொடங்குகிறது.

    தமிழகத்தை போலவே புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் பின்பற்றப்படுகிறது. அதன்படி இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலமாக மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.

    எனவே விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலமாக இந்த குறிப்பிட்ட 61 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க கூடாது. கடலுக்கு படகுகளுடன் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் வருகிற 14-ந்தேதி இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


    Next Story
    ×