search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதுவையில் புதிதாக 223 பேருக்கு கொரோனா

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 43 ஆயிரத்து 465 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று 3 ஆயிரத்து 751 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதிதாக 223 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 168, காரைக்காலில் 5 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் தற்போது 158, காரைக்காலில் 46, ஏனாமில் 10, மாகியில் 9 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 61, காரைக்காலில் 61, ஏனாமில் ஒருவர், மாகியில் 16 பேர் என 139 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 43 ஆயிரத்து 465 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் 534 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 40 ஆயிரத்து 694 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் ஆயிரத்து 52, காரைக்காலில் 413, ஏனாமில் 30, மாகியில் 55 பேர் என ஆயிரத்து 550 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    புதுவை மாநிலத்தில் தற்போது 2 ஆயிரத்து 84 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு 687 பேர் பலியாகியுள்ளனர்.

    இத்தகவல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×