search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மோட்டார் மோதிய தகராறில் வக்கீலை தாக்கி கொலை மிரட்டல்

    புதுச்சேரி அருகே மோட்டார்சைக்கிள் மோதிய தகராறில் வக்கீலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    மூலக்குளம் காரை கோவிந்தன் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இவர் அலுவலக பணியை முடித்து விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    மூலக்குளம் தனியார் கார் ஷோரூம் அருகே வந்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென திரும்பியதால் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வேல்முருகன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலைத்தடுமாறி வக்கீல் வேல்முருகன் கீழே விழுந்தார். ஆனால் எதிர் திசையில் வந்த 2 பேரும் வக்கீல் வேல்முருகனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். இந்த தாக்குதலின் போது வேல்முருகன் அணிந்திருந்த கண் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

    மேலும் வக்கீல் வேல்முருகனை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றனர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த வக்கீல் வேல்முருகன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×