search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதுவையில் ஒரே நாளில் 293 பேருக்கு கொரோனா

    புதுவையில் நாள்தோறும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அனைவரும் முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று 3 ஆயிரத்து 451 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதிதாக 293 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 181, காரைக்காலில் 87, ஏனாமில் 10, மாகியில் 15 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் தற்போது 416, காரைக்காலில் 51, ஏனாமில் 17, மாகியில் 6 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 91, காரைக்காலில் 17, ஏனாமில் 2, மாகியில் 3 பேர் என 113 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 43 ஆயிரத்து 242 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 490 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 40 ஆயிரத்து 555 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    புதுவையில் 992, காரைக்காலில் 436, ஏனாமில் 21, மாகியில் 61 பேர் என ஆயிரத்து 510 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் தற்போது 2 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு 687 பேர் பலியாகியுள்ளனர்.

    இத்தகவல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதுவையில் கடந்த சில நாட்களாக 200 பேருக்கு தொற்று பரவிய நிலையில்  ஒரே நாளில் 293 பேருக்கு தொற்று பரவியுள்ளது. நாள்தோறும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அனைவரும் முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
    Next Story
    ×