என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தண்ணீர் தட்டுப்பாடு- செவ்வந்தி பூக்கள் விளைச்சல் குறைவு
Byமாலை மலர்8 April 2021 9:31 AM GMT (Updated: 8 April 2021 9:31 AM GMT)
காரியாபட்டி பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டினால் செவ்வந்தி பூக்களின் விளைச்சல் குறைந்து உள்ளது.
காரியாபட்டி:
காரியாபட்டி அருகே அரசங்குளம் பகுதியில் மல்லிகை பூக்கள், செவ்வந்தி பூக்கள், காய்கறி, வெங்காயம் ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்வதால் தற்போது விவசாயம் செய்யும் பரப்பளவும் குறைந்து வருகிறது. 5 ஏக்கர் விவசாயம் செய்த விவசாயிகள் இன்று ஒரு ஏக்கர் மட்டுமே விவசாயம் செய்கின்றனர்.
கிடைக்கும் தண்ணீரை வைத்து இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது செவ்வந்தி பூ சாகுபடி செய்தனர். இந்த பூக்கள் தற்போது பூக்க ஆரம்பித்து விட்டன.
போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் எதிர்பார்த்த அளவு பூக்கள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
காரியாபட்டி பகுதியில் உள்ள எண்ணற்ற பேர் விவசாயத்தை நம்பி தான் பிழைத்து வருகிறோம்.
இந்த பகுதியில் விவசாயம் செய்யக்கூடிய அளவிற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இருப்பினும் இருக்கிற தண்ணீரை வைத்து செவ்வந்தி பூ சாகுபடி செய்தோம். அது தற்போது பூக்க ஆரம்பித்து விட்டது.
இருப்பினும் தண்ணீர் போதுமான அளவு இல்லாததாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைவாக இருப்பதாலும் எதிர்பார்த்த அளவு பூக்களில் மகசூல் பெறமுடியவில்லை.
எனவே இந்த பகுதியில் நிலத்தடி நீர் உயர்வதற்கு நிலையூர் கம்பிக்குடி கால்வாய் திட்டம் மூலம் இந்த பகுதியில் உள்ள கண்மாய்களை நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
காரியாபட்டி அருகே அரசங்குளம் பகுதியில் மல்லிகை பூக்கள், செவ்வந்தி பூக்கள், காய்கறி, வெங்காயம் ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்வதால் தற்போது விவசாயம் செய்யும் பரப்பளவும் குறைந்து வருகிறது. 5 ஏக்கர் விவசாயம் செய்த விவசாயிகள் இன்று ஒரு ஏக்கர் மட்டுமே விவசாயம் செய்கின்றனர்.
கிடைக்கும் தண்ணீரை வைத்து இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது செவ்வந்தி பூ சாகுபடி செய்தனர். இந்த பூக்கள் தற்போது பூக்க ஆரம்பித்து விட்டன.
போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் எதிர்பார்த்த அளவு பூக்கள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
காரியாபட்டி பகுதியில் உள்ள எண்ணற்ற பேர் விவசாயத்தை நம்பி தான் பிழைத்து வருகிறோம்.
இந்த பகுதியில் விவசாயம் செய்யக்கூடிய அளவிற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இருப்பினும் இருக்கிற தண்ணீரை வைத்து செவ்வந்தி பூ சாகுபடி செய்தோம். அது தற்போது பூக்க ஆரம்பித்து விட்டது.
இருப்பினும் தண்ணீர் போதுமான அளவு இல்லாததாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைவாக இருப்பதாலும் எதிர்பார்த்த அளவு பூக்களில் மகசூல் பெறமுடியவில்லை.
எனவே இந்த பகுதியில் நிலத்தடி நீர் உயர்வதற்கு நிலையூர் கம்பிக்குடி கால்வாய் திட்டம் மூலம் இந்த பகுதியில் உள்ள கண்மாய்களை நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X