என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முழு கவச உடை அணிந்து வந்து ஓட்டுப்போட்ட 510 கொரோனா நோயாளிகள்
Byமாலை மலர்7 April 2021 3:42 AM GMT (Updated: 7 April 2021 3:42 AM GMT)
கொரோனா நோயாளிகள் வந்து வாக்களித்தபோது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பலர் அச்சத்துடனேயே பணி செய்தனர். சிலர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
புதுச்சேரி:
சட்டமன்ற தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி கொரோனா பாதித்த நோயாளிகள் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை ஓட்டுப் போட்டனர். இதற்காக வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு முககவசம், சீல்ட், கையுறை வழங்கப்பட்டது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் புதுவையில் 220, காரைக்காலில் 247, மாகியில் 25, ஏனாமில் 18 என மொத்தம் 510 பேர் வாக்களித்துள்ளனர்.
புதுவையில் நேற்று முன்தினம் நிலவரப்படி 1,773 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 510 பேர் மட்டுமே வாக்களித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வாக்குச்சாவடியில் பணியாற்றும் அதிகாரிகள், கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் முழு கவச உடை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் தான் முழு கவச உடை வழங்கப்பட்டது. வாக்குச்சாவடி அதிகாரிகள், ஊழியர்களுக்கு கவச உடை எதுவும் வழங்கப்படவில்லை.
இதனால் கொரோனா நோயாளிகள் வந்து வாக்களித்தபோது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பலர் அச்சத்துடனேயே பணி செய்தனர். சிலர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
சட்டமன்ற தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி கொரோனா பாதித்த நோயாளிகள் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை ஓட்டுப் போட்டனர். இதற்காக வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு முககவசம், சீல்ட், கையுறை வழங்கப்பட்டது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் புதுவையில் 220, காரைக்காலில் 247, மாகியில் 25, ஏனாமில் 18 என மொத்தம் 510 பேர் வாக்களித்துள்ளனர்.
புதுவையில் நேற்று முன்தினம் நிலவரப்படி 1,773 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 510 பேர் மட்டுமே வாக்களித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வாக்குச்சாவடியில் பணியாற்றும் அதிகாரிகள், கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் முழு கவச உடை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் தான் முழு கவச உடை வழங்கப்பட்டது. வாக்குச்சாவடி அதிகாரிகள், ஊழியர்களுக்கு கவச உடை எதுவும் வழங்கப்படவில்லை.
இதனால் கொரோனா நோயாளிகள் வந்து வாக்களித்தபோது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பலர் அச்சத்துடனேயே பணி செய்தனர். சிலர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X