search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தேசூரில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

    திருவண்ணாமலை மாவட்டம் தேசூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேரை கைது செய்தனர்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நசுருதீன் மற்றும் போலீசார் தேசூரில் மழையூர் சாலையில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மினி வேன் வந்தது. அதை நிறுத்தி போலீசார் சோதனைச் செய்தனர். அதில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

    மதுபாட்டில்களை கடத்தி வந்த சாத்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (வயது 32), ஜஸ்டின் (39), திருமலை (41) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 191 மதுபாட்டில்கள், மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×