என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோபி அருகே ஆற்றில் மூழ்கி பெண் பலி
Byமாலை மலர்5 April 2021 9:45 AM GMT (Updated: 5 April 2021 9:45 AM GMT)
கோபி அருகே ஆற்றில் மூழ்கி பெண் பரிதாபமாக இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
கோபி அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி. பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நந்தினி (வயது 22) நேற்று முன்தினம் கோபியை அடுத்த காசிபாளையம் அருகே பவானி ஆற்றில் உள்ள பேயணை மடுவு என்ற பகுதிக்கு துணி துவைப்பதற்காக அக்கா செல்வி மற்றும் உறவினர்களுடன் சென்று உள்ளார்.
அங்கு அவர் ஆற்றில் துவைத்து கொண்டிருந்தபோது துணி ஒன்று நழுவி ஆற்றில் போனது. அதை எடுப்பதற்காக அவர் சென்று உள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். இதில் நீச்சல் தெரியாததால் அவர் ஆற்றில் மூழ்கினார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். உடனே இதுகுறித்து கோபி தீயணைப்பு துறைக்கும், பங்களாப்புதூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நந்தினியின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்குள் இருட்டிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் தேடுதல் பணி நடைபெற்றது. மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் நந்தினியின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். உடனே நந்தினியின் உடலை போலீசார் கைப்பற்றி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X