search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    புதுவையில் 227 பேருக்கு கொரோனா பாதிப்பு

    புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகம் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகம் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 416 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 227 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 109 பேர் குணமடைந்தனர்.

    மாநிலத்தில் இதுவரை 42 ஆயிரத்து 359 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 ஆயிரத்து 83 பேர் குணமடைந்துள்ளனர்.

    தற்போது 404 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 1,188 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது 1,592 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 684 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 560 பேரும், முன்கள பணியாளர்கள் 2 ஆயிரத்து 465 பேரும், பொதுமக்கள் 2 ஆயிரத்து 14 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 80 ஆயிரத்து 198 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×