search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நாகூர் அருகே சாராயம் கடத்திய வாலிபர் கைது

    நாகூர் அருகே சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    நாகூர்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாகூர் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது வாஞ்சூரில் இருந்து நாகையை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    விசாரணையில் அவர், செல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குப்புசாமி மகன் மருத கண்ணன் (வயது 38) என்பதும், அவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத கண்ணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 35 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×