search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திடீரென தீப்பிடித்து எரிவதை படத்தில் காணலாம்.
    X
    திடீரென தீப்பிடித்து எரிவதை படத்தில் காணலாம்.

    கிரீன் சர்க்கிள் அருகே பாலத்தின் அடியில் திடீர் தீ

    வேலூர்-காட்பாடி சாலை கிரீன் சர்க்கிள் அருகே உள்ள பாலத்தின் அடியில் குப்பைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
    வேலூர்:

    வேலூர்-காட்பாடி சாலை கிரீன் சர்க்கிள் அருகே உள்ள பாலத்தின் அடியில் குப்பைகள், காய்ந்த மரக்கிளைகள் உள்ளிட்டவை குவிந்து கிடந்தன.

    இந்த நிலையில் நேற்று மாலை இந்த குப்பைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதனால் பாலத்தின் அடியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இதேபோன்று சைதாப்பேட்டை கானாற்றுபாலத்தில் குவிந்து கிடந்த குப்பைகளும் தீப்பிடித்து எரிந்தன. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
    Next Story
    ×