என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பாரூர் அருகே கார் மோதி பெண் பலி

    பாரூர் அருகே கார் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    போச்சம்பள்ளி தாலுகா அரசம்பட்டி அருகே உள்ள புலியூரை சேர்ந்தவர் பாஷா. இவரது மனைவி தில்சாத் (வயது 39). சம்பவத்தன்று இவர் போச்சம்பள்ளியில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதியது. 

    இதில் படுகாயம் அடைந்த தில்சாத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிசசைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தில்சாத் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×