search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தே.மு.தி.க. வேட்பாளர் ஞானபண்டிதன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    தே.மு.தி.க. வேட்பாளர் ஞானபண்டிதன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    கடலூரில் சட்டக்கல்லூரி அமைக்கப்படும்- தேமுதிக வேட்பாளர் ஞானபண்டிதன் வாக்குறுதி

    சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் கடலூரில் சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என்று தே.மு.தி.க. வேட்பாளர் ஞானபண்டிதன் வாக்குறுதி அளித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் ஞானபண்டிதன் நேற்று தொகுதிக்குட்பட்ட தூக்கணாம்பாக்கம், உள்ளேரிப்பட்டு, களையூர், திருப்பணாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்தவெளி வாகனத்தில் சென்று தீவிர பிரசாரம் செய்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், நான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்படும். கடலூரில் அரசு வேளாண் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி அமைத்து தரப்படும். கடலூர் துறைமுகத்தில் புதிய பேருந்து நிலையம் அமைத்து தரப்படும் என்று கூறி முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்து பேசினார்.

    இதில் தே.மு.தி.க. தொகுதி பொறுப்பாளர் லெனின், தே.மு.தி.க. கடலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சித்தநாதன் மாவட்ட பொறுப்பாளர் ராஜா, ஐயப்பன், கலாநிதி மாவட்ட இளைஞரணி ராஜி, அ.ம.மு.க. மாவட்ட பிரதிநிதி நாராயணன், அ.ம.மு.க. வக்கீல் பிரிவு சத்தியராஜ், அ.ம.மு.க. சார்பில் மாவட்ட அவை தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் பாடலீஸ்வரன், மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜலட்சுமி, அ.ம.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் உத்திராபதி மூத்த நிர்வாகி சுரேஷ்பாபு, அ.ம.மு.க. நகர செயலாளர் ராதாகிருஷ்ணன், எஸ்.டி.பி.ஐ. இதயதுல்லா, ஏ.ஐ.எம்.ஐ.எம். சிராஜ், ஒன்றிய இணை செயலாளர்கள் உத்திராபதி, பழனியம்மாள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×