என் மலர்
செய்திகள்

கைது
குந்தாரப்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது
குந்தாரப்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி சந்தை பகுதியில் குருபரப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காணிக்கைசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பில்லனகுப்பம் பகுதியை சேர்ந்த நஞ்சுன்டன் (வயது 40) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






