என் மலர்
செய்திகள்

கூடலூரில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் பார்வையிட்டார்.
கூடலூரில் 5 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி
கூடலூரில் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நகர பகுதியில் 5 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கூடலூர்:
கூடலூர் பகுதியில் தற்போது இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கூடலூரில் உள்ள முக்கிய ஆறுகளில் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்து விட்டது. மேலும் கூடலூர் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஓவேலி பல்மாடி, ஆத்தூர், ஹெலன் உள்பட பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளில் தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. இதனால் கூடலூர் நகர மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கோக்கால், ஹெல்த் கேம்ப், ராஜகோபாலபுரம், கே.கே. நகர், அத்திப்பாளி, இரும்பு பாலம் ஆகிய 5 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க தடை அமலில் உள்ளதால், இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து உரிய அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 5 இடங்களில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் குடிநீர் வழங்கல் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து நிலத்தடி நீரோட்டம் கண்டறியும் பணி நடைபெற்றது.
பின்னர் அடையாளம் காணப்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். தொடர்ந்து விரைவாக பணிகளை முடிக்க உத்தரவிட்டனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
கூடலூர் நகர மக்களுக்கு தடுப்பணைகள் மற்றும் பாண்டியாற்றில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. வறட்சியின் தாக்கம் அதிகமாகி வருவதால் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை காணப்படுகிறது. இதனால் நகரப் பகுதியில் 5 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது.
தொடர்ந்து மின் மோட்டார்கள் மூலம் நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும். மேலும் பொதுமக்களும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு குடிநீரை வீணாக்க கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூடலூர் பகுதியில் தற்போது இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கூடலூரில் உள்ள முக்கிய ஆறுகளில் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்து விட்டது. மேலும் கூடலூர் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஓவேலி பல்மாடி, ஆத்தூர், ஹெலன் உள்பட பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளில் தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. இதனால் கூடலூர் நகர மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கோக்கால், ஹெல்த் கேம்ப், ராஜகோபாலபுரம், கே.கே. நகர், அத்திப்பாளி, இரும்பு பாலம் ஆகிய 5 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க தடை அமலில் உள்ளதால், இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து உரிய அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 5 இடங்களில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் குடிநீர் வழங்கல் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து நிலத்தடி நீரோட்டம் கண்டறியும் பணி நடைபெற்றது.
பின்னர் அடையாளம் காணப்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். தொடர்ந்து விரைவாக பணிகளை முடிக்க உத்தரவிட்டனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
கூடலூர் நகர மக்களுக்கு தடுப்பணைகள் மற்றும் பாண்டியாற்றில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. வறட்சியின் தாக்கம் அதிகமாகி வருவதால் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை காணப்படுகிறது. இதனால் நகரப் பகுதியில் 5 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது.
தொடர்ந்து மின் மோட்டார்கள் மூலம் நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும். மேலும் பொதுமக்களும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு குடிநீரை வீணாக்க கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story






