என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தனூர் அருகே குட்டையில் மூழ்கி தாய்-மகள் பலி
Byமாலை மலர்25 March 2021 3:14 PM GMT (Updated: 25 March 2021 3:14 PM GMT)
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகே குளிக்க சென்ற தாய்- மகள் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் பள்ளிகூடத் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சென்னம்மாள் (35). இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு. மூத்த மகள் மோனிஷா (12), ஏழாம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று முன்தினம் சென்னம்மாளும், மகள் மோனிஷாவும் துணி துவைப்பதற்காக அருகிலுள்ள குட்டைக்கு சென்றுள்ளனர். அங்கு சென்னம்மாள் துணி துவைத்துக் கொண்டிருந்த போது மோனிஷா தண்ணீரில் இறங்கி குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் சிக்கிய மோனிஷா உயிருக்கு போராடினாள்.
அவளை காப்பாற்றுவதற்காக சென்னம்மாள் தண்ணீரில் இறங்கி உள்ளார். அவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளளார். இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து ஓடி வந்து இருவரையும் மீட்டு சாத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தாய், மகள் இருவரும் பரிதாபமாக இறந்துவிட்டனர்.
இதுகுறித்து சாத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X