என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் விஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலை
Byமாலை மலர்25 March 2021 9:30 AM GMT (Updated: 25 March 2021 9:30 AM GMT)
திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்- மனைவி இருவரும் ஏன் தற்கொலை செய்து கொண்டனர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்காட்டுப்பள்ளி:
அரியலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் காலனி தெருவை சேர்ந்தவர் முத்துசாமி(வயது 68). இவருடைய மனைவி பாஞ்சாலை(65). இவர்களுக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களில் ஒரு மகனுக்கு தண்டுவட பாதிப்பு காரணமாக படுத்த படுக்கையாக இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் பாஞ்சாலைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் முத்துசாமியும், பாஞ்சாலையும் கடந்த 21-ந் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு தஞ்சைக்கு வந்தனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள புதுச்சத்திரம் பயணியர் விடுதி எதிரே உள்ள காவிரி ஆற்று படித்துறைக்கு வந்த கணவன்-மனைவி இருவரும் அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்து இறந்தனர். நேற்று மதியம் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் 2 பேர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணவன்-மனைவி இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்- மனைவி இருவரும் ஏன் தற்கொலை செய்து கொண்டனர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் காலனி தெருவை சேர்ந்தவர் முத்துசாமி(வயது 68). இவருடைய மனைவி பாஞ்சாலை(65). இவர்களுக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களில் ஒரு மகனுக்கு தண்டுவட பாதிப்பு காரணமாக படுத்த படுக்கையாக இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் பாஞ்சாலைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் முத்துசாமியும், பாஞ்சாலையும் கடந்த 21-ந் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு தஞ்சைக்கு வந்தனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள புதுச்சத்திரம் பயணியர் விடுதி எதிரே உள்ள காவிரி ஆற்று படித்துறைக்கு வந்த கணவன்-மனைவி இருவரும் அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்து இறந்தனர். நேற்று மதியம் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் 2 பேர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணவன்-மனைவி இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்- மனைவி இருவரும் ஏன் தற்கொலை செய்து கொண்டனர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X