என் மலர்
செய்திகள்

விபத்து
கலசபாக்கம் அருகே ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் விபத்தில் பலி
கலசபாக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கலசபாக்கம்:
கலசபாக்கத்தை அடுத்த சாலையனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 70), ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். நேற்று காலை வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் புறப்பட்ட அவர், கலசபாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்குச் செல்ல வந்து கொண்டிருந்தார்.
ஓரிடத்தில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக பின்னால் கலசபாக்கத்தில் இருந்து திருவண்ணாமலையை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென அவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
அதில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை, டாக்டர் பரிசோதனை செய்து பார்த்தபோது, சத்தியசீலன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினர். கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






