search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விருதுநகரில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல் - கேபிள் டி.வி. அதிபர் உள்பட 2 பேர் கைது

    விருதுநகரில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய கேபிள் டி.வி. தொழிலதிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டை சேர்ந்த வாகன விற்பனை தொழிலதிபர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாளிடம் கொடுத்த புகார் மனுவில், விருதுநகர் வீராச்சாமி தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) மற்றும் வையாபுரி தெருவை சேர்ந்த கேபிள் டி.வி. தொழில் நடத்தி வரும் பிரேம்குமார் (48) ஆகிய இருவரும் சேர்ந்து தனது மனைவியின் ஆபாச படத்தை தனக்கு அனுப்பி வைத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பிரேம்குமார், மணிகண்டனின் செல்போனில் இருந்து ஆபாச படத்தை தொழில்அதிபரின் செல்போனுக்கு அனுப்பி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

    இதையடுத்து இந்நகர் கிழக்கு போலீசார், மணிகண்டன் மற்றும் பிரேம்குமார் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன் கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    Next Story
    ×