என் மலர்
செய்திகள்

கைது
மனைவியின் ஆபாச படத்தை செல்போனில் அனுப்பி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்- 2 பேர் கைது
விருதுநகரில் மனைவியின் ஆபாச படத்தை செல்போனில் அனுப்பி தொழில் அதிபரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர்:
விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் அதே பகுதியில் மோட்டார் வாகன உதிரி பாகங்களை விற்கும் கடை நடத்தி வருகிறார்.
இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாளிடம் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- எனது மனைவி விருதுநகர் பகுதியில் உள்ள தனியார் தனியார் பள்ளியில் பகுதி நேர ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
அப்போது வையாபுரி தெருவைச் சேர்ந்த கேபிள் டி.வி. நடத்தி வரும் பிரேம்குமார் (வயது 48) என்பவர் நிகழ்ச்சிக்காக பள்ளிக்கு சென்றுள்ளார்.
அங்கு எனது மனைவியிடம் அறிமுகமாகி அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் எனது மனைவி தனியாக இருந்த போது பிரேம்குமார் அத்துமீறி நுழைந்து வலுக்கட்டாயமாக நெருங்கி பழகி உள்ளார்.
இதை வெளியே சொன்னால் உனது குடும்பத்தினரை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரேம்குமார் தூண்டுதலின் பேரில் வீராசாமி தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பவர் எனது மனைவியின் ஆபாச படத்தை எனது செல்போனுக்கு அனுப்பினார்.
பின்னர் 2 பேரும் ரூ.20 லட்சம் தராவிட்டால் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி உங்களது குடும்பத்தையும், தொழிலையும் நாசப்படுத்துவோம் என மிரட்டினர்.
எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு விருதுநகர் கிழக்கு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பிரேம்குமார், மணிகண்டன் ஆகியோர் ஆபாச படத்தை அனுப்பி மிரட்டியது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் அதே பகுதியில் மோட்டார் வாகன உதிரி பாகங்களை விற்கும் கடை நடத்தி வருகிறார்.
இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாளிடம் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- எனது மனைவி விருதுநகர் பகுதியில் உள்ள தனியார் தனியார் பள்ளியில் பகுதி நேர ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
அப்போது வையாபுரி தெருவைச் சேர்ந்த கேபிள் டி.வி. நடத்தி வரும் பிரேம்குமார் (வயது 48) என்பவர் நிகழ்ச்சிக்காக பள்ளிக்கு சென்றுள்ளார்.
அங்கு எனது மனைவியிடம் அறிமுகமாகி அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் எனது மனைவி தனியாக இருந்த போது பிரேம்குமார் அத்துமீறி நுழைந்து வலுக்கட்டாயமாக நெருங்கி பழகி உள்ளார்.
இதை வெளியே சொன்னால் உனது குடும்பத்தினரை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரேம்குமார் தூண்டுதலின் பேரில் வீராசாமி தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பவர் எனது மனைவியின் ஆபாச படத்தை எனது செல்போனுக்கு அனுப்பினார்.
பின்னர் 2 பேரும் ரூ.20 லட்சம் தராவிட்டால் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி உங்களது குடும்பத்தையும், தொழிலையும் நாசப்படுத்துவோம் என மிரட்டினர்.
எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு விருதுநகர் கிழக்கு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பிரேம்குமார், மணிகண்டன் ஆகியோர் ஆபாச படத்தை அனுப்பி மிரட்டியது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைத்தனர்.
Next Story






