என் மலர்
செய்திகள்

தற்கொலை
தொழிலில் நஷ்டம்- வியாபாரி தற்கொலை
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
தேங்காய்திட்டு நேரு நகரை சேர்ந்தவர் சந்திரமவுலீஸ்வரர் (வயது 47). இவரது மனைவி சுப்ரியா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சந்திரமவுலீஸ்வரர் குடிநீர் சுத்திகரிப்பு மிஷின் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.
கடந்த ஒரு வருடமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், சம்பவத்தன்று வீட்டில் எலி மருந்து தின்று மயங்கி கிடந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று காலை சந்திரமவுலீஸ்வரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story