என் மலர்

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    உத்திரமேரூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை சேர்ந்தவர் வரதராஜன். இவர் உத்திரமேரூர் அடுத்த காரணை கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் வந்திருந்தார். வீட்டின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்த அவரது குழந்தை பிரித்திகா ஸ்ரீ அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

    குழந்தையை காணாது தேடி வந்தவர்கள் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை வெளியில் எடுத்து உடனடியாக உத்திரமேரூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×