என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்திரமேரூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி
Byமாலை மலர்18 March 2021 12:18 PM GMT (Updated: 18 March 2021 12:18 PM GMT)
விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை சேர்ந்தவர் வரதராஜன். இவர் உத்திரமேரூர் அடுத்த காரணை கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் வந்திருந்தார். வீட்டின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்த அவரது குழந்தை பிரித்திகா ஸ்ரீ அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
குழந்தையை காணாது தேடி வந்தவர்கள் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை வெளியில் எடுத்து உடனடியாக உத்திரமேரூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X