search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் செம்பனார்கோவிலில் சாலைமறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
    X
    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் செம்பனார்கோவிலில் சாலைமறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    பூம்புகார் தொகுதி வேட்பாளர் செந்தமிழனை மாற்றக்கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியல்

    மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டசபை தொகுதி வேட்பாளர் செந்தமிழனை மாற்றக்கோரி செம்பனார்கோவிலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பொறையாறு:

    மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தமிழன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட செம்பனார் கோவிலில் உள்ள வடக்கு ஒன்றிய செயலாளர் அலுவலகம் முன்பு வேட்பாளர் செந்தமிழனை மாற்றக்கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியல் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய அவை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில், பூம்புகார் தொகுதியில் அனைவரையும் கவர்ந்த செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனனை வேட்பாளராக தேர்ந்தெடுக்காமல் தொகுதியில் அதிகம் அறிமுகமில்லாத செந்தமிழனை தேர்வு செய்ததால் அ.ம.மு.க. வெற்றி வாய்ப்பு பறிபோய்விடும் என கோஷங்கள் எழுப்பினர். இதில் பெண்கள் உள்பட திரளான கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
    Next Story
    ×