search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெடி விபத்து நடந்த இடத்தை கடலூர் தாசில்தார் பலராமன் பார்வையிட்டு ‌ஆய்வு செய்தார்
    X
    வெடி விபத்து நடந்த இடத்தை கடலூர் தாசில்தார் பலராமன் பார்வையிட்டு ‌ஆய்வு செய்தார்

    கடலூர் அருகே வெடி விபத்து- பட்டாசு ஆலை தரைமட்டம்

    பட்டாசு ஆலை ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்ததால் பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே நல்லப்பரெட்டிபாளையத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு தென்னந்தோப்பில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. நேற்று முன்தினம் வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசுகளை தயாரித்து வைத்து விட்டு, மாலையில் வீடுகளுக்கு சென்று விட்டனர். மேலும் அங்கு பட்டாசுகள் தயாரிக்க வெடி மருந்து உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை பட்டாசு ஆலையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மற்றும் வெடி பொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின. சுமார் 10 நிமிடம் தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடித்ததில், பட்டாசு ஆலை கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமாக காட்சி அளித்தது.

    கடலூர் தாசில்தார் மற்றும் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெடிவிபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், கிளிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த சீத்தாராமன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை என்பதும், கோவில் திருவிழாவுக்காக 2 மூட்டைகளில் பட்டாசுகளை தயாரித்து வைத்திருந்ததும், மேலும் பட்டாசு தயாரிப்பதற்காக குறிப்பிட்ட அளவில் வெடிமருந்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

    வெடிவிபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டாசு ஆலை ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்ததாலும், அதிகாலை நேரத்தில் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியதாலும் பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
    Next Story
    ×