என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர் அருகே வெடி விபத்து- பட்டாசு ஆலை தரைமட்டம்
Byமாலை மலர்13 March 2021 3:47 AM GMT (Updated: 13 March 2021 3:47 AM GMT)
பட்டாசு ஆலை ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்ததால் பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
நெல்லிக்குப்பம்:
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே நல்லப்பரெட்டிபாளையத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு தென்னந்தோப்பில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. நேற்று முன்தினம் வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசுகளை தயாரித்து வைத்து விட்டு, மாலையில் வீடுகளுக்கு சென்று விட்டனர். மேலும் அங்கு பட்டாசுகள் தயாரிக்க வெடி மருந்து உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை பட்டாசு ஆலையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மற்றும் வெடி பொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின. சுமார் 10 நிமிடம் தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடித்ததில், பட்டாசு ஆலை கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமாக காட்சி அளித்தது.
கடலூர் தாசில்தார் மற்றும் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெடிவிபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கிளிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த சீத்தாராமன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை என்பதும், கோவில் திருவிழாவுக்காக 2 மூட்டைகளில் பட்டாசுகளை தயாரித்து வைத்திருந்ததும், மேலும் பட்டாசு தயாரிப்பதற்காக குறிப்பிட்ட அளவில் வெடிமருந்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
வெடிவிபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டாசு ஆலை ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்ததாலும், அதிகாலை நேரத்தில் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியதாலும் பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே நல்லப்பரெட்டிபாளையத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு தென்னந்தோப்பில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. நேற்று முன்தினம் வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசுகளை தயாரித்து வைத்து விட்டு, மாலையில் வீடுகளுக்கு சென்று விட்டனர். மேலும் அங்கு பட்டாசுகள் தயாரிக்க வெடி மருந்து உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை பட்டாசு ஆலையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மற்றும் வெடி பொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின. சுமார் 10 நிமிடம் தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடித்ததில், பட்டாசு ஆலை கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமாக காட்சி அளித்தது.
கடலூர் தாசில்தார் மற்றும் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெடிவிபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கிளிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த சீத்தாராமன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை என்பதும், கோவில் திருவிழாவுக்காக 2 மூட்டைகளில் பட்டாசுகளை தயாரித்து வைத்திருந்ததும், மேலும் பட்டாசு தயாரிப்பதற்காக குறிப்பிட்ட அளவில் வெடிமருந்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
வெடிவிபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டாசு ஆலை ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்ததாலும், அதிகாலை நேரத்தில் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியதாலும் பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X