search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வேதாரண்யம் அருகே குடும்ப பிரச்சனையில் பெண் தீக்குளித்து தற்கொலை

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினம் அருகே உள்ள செம்பியமனக்கொடி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஜெயப்பிரியா (வயது 29). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதில் மனமுடைந்த ஜெயப்பிரியா உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயப்பிரியா இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×