என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    புதுவையில் 26 பேருக்கு கொரோனா தொற்று

    புதுவையில் நேற்று ஆயிரத்து 704 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று ஆயிரத்து 704 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 17, காரைக்காலில் 6, மாகியில் 2 பேர், ஏனாமில் ஒருவர் என புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் தற்போது 72, காரைக்காலில் 11, மாகியில் 3 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 12, காரைக்காலில் 5, மாகியில் 2 பேர் என 19 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 39 ஆயிரத்து 908 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 86 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவ மனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 39 ஆயிரத்து 60 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    புதுவையில் 25, காரைக்காலில் 36, ஏனாமில் ஒருவர், மாகியில் 30 பேர் என 92 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் தற்போது 178 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு 670 பேர் பலியாகியுள்ளனர்.

    இத்தகவல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×