என் மலர்
செய்திகள்

தொழில்நுட்ப உதவியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப ஊழியர்கள் தர்ணா
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி நிரவல் செய்யப்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாமலைநகர்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியாளர், இளநிலை தொழில்நுட்ப அலுவலர் நிலை 2, தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றி வந்த 179 பேர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு பணி நிரவல் செய்யப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்ட பொறுப்பையோ அல்லது அதற்கு இணையான பொறுப்பையோ வழங்காமல் ஐ.டி.ஐ. மற்றும் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்குரிய நுழைவு நிலை தொழில்நுட்ப பணி என்ற பதவியை வழங்கியுள்ளனர்.
இதனால் பணி நிரவல் செய்யப்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் தங்கள் கல்வித் தகுதிக்கேற்ப பணி நியமனம் செய்ய வேண்டும், பணிநிரவல் ஆணையை ரத்து செய்துவிட்டு, புதிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார், தொழில்நுட்ப உதவியாளர்களின் கோரிக்கைகள் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்தல் நேரத்தில் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்றும் கூறி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியாளர், இளநிலை தொழில்நுட்ப அலுவலர் நிலை 2, தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றி வந்த 179 பேர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு பணி நிரவல் செய்யப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்ட பொறுப்பையோ அல்லது அதற்கு இணையான பொறுப்பையோ வழங்காமல் ஐ.டி.ஐ. மற்றும் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்குரிய நுழைவு நிலை தொழில்நுட்ப பணி என்ற பதவியை வழங்கியுள்ளனர்.
இதனால் பணி நிரவல் செய்யப்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் தங்கள் கல்வித் தகுதிக்கேற்ப பணி நியமனம் செய்ய வேண்டும், பணிநிரவல் ஆணையை ரத்து செய்துவிட்டு, புதிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார், தொழில்நுட்ப உதவியாளர்களின் கோரிக்கைகள் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்தல் நேரத்தில் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்றும் கூறி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






