என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 19½ பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்4 March 2021 5:35 PM GMT (Updated: 4 March 2021 5:35 PM GMT)
பெண்ணிடம் நகைகளை திருடிய 3 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி கீதா (வயது 40). இவரது தம்பி திருமணத்திற்காக சம்பவத்தன்று நெய்வேலியில் இருந்து புதுவையை அடுத்த பொம்மையார்பாளையத்திற்கு வந்தார். திருமணம் முடிந்த பின்னர் அவர் நெய்வேலி புறப்பட்டார்.
இதற்காக பொம்மையார்பாளையத்தில் இருந்த தனியார் பஸ்சில் ஏறி புதுச்சேரிக்கு வந்தார். அப்போது அவர் தனது 19½ பவுன் நகைகளை ஒரு சிறிய மணிபர்சில் வைத்து கைப்பையில் வைத்திருந்தார்.
பஸ்சில் ஏறிய உடன் அருகில் இருந்த 3 பெண்கள் அவரிடம் பேச்சு கொடுத்தனர். மேலும் அவரது கையில் இருந்த கைப்பையையும் வாங்கி வைத்துக்கொண்டனர்.
புதுவை புதிய பஸ்நிலையத்திற்கு பஸ் வந்த உடன் கீதா, தனது கைப்பையை அந்த பெண்களிடம் இருந்து வாங்கிக்கொண்டு பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது அந்த பெண்கள் 3 பேரும் அவரை இடித்துக்கொண்டு பஸ்சை விட்டு இறங்கி அவசர அவசரமாக சென்றனர்.
இதனால் ஏதோ விபரீதம் நடந்ததை உணர்ந்த கீதா தனது கைப்பையை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்து 19½ பவுன் நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பஸ்நிலையம் முழுவதும் அந்த பெண்களை தேடினார். அதற்குள் அவர்கள் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.
இது குறித்து கீதா உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி 3 பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் பஸ்நிலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த பெண்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி கீதா (வயது 40). இவரது தம்பி திருமணத்திற்காக சம்பவத்தன்று நெய்வேலியில் இருந்து புதுவையை அடுத்த பொம்மையார்பாளையத்திற்கு வந்தார். திருமணம் முடிந்த பின்னர் அவர் நெய்வேலி புறப்பட்டார்.
இதற்காக பொம்மையார்பாளையத்தில் இருந்த தனியார் பஸ்சில் ஏறி புதுச்சேரிக்கு வந்தார். அப்போது அவர் தனது 19½ பவுன் நகைகளை ஒரு சிறிய மணிபர்சில் வைத்து கைப்பையில் வைத்திருந்தார்.
பஸ்சில் ஏறிய உடன் அருகில் இருந்த 3 பெண்கள் அவரிடம் பேச்சு கொடுத்தனர். மேலும் அவரது கையில் இருந்த கைப்பையையும் வாங்கி வைத்துக்கொண்டனர்.
புதுவை புதிய பஸ்நிலையத்திற்கு பஸ் வந்த உடன் கீதா, தனது கைப்பையை அந்த பெண்களிடம் இருந்து வாங்கிக்கொண்டு பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது அந்த பெண்கள் 3 பேரும் அவரை இடித்துக்கொண்டு பஸ்சை விட்டு இறங்கி அவசர அவசரமாக சென்றனர்.
இதனால் ஏதோ விபரீதம் நடந்ததை உணர்ந்த கீதா தனது கைப்பையை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்து 19½ பவுன் நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பஸ்நிலையம் முழுவதும் அந்த பெண்களை தேடினார். அதற்குள் அவர்கள் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.
இது குறித்து கீதா உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி 3 பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் பஸ்நிலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த பெண்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X