என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சங்கராபரணி ஆற்றில் மினி வேனில் மணல் கடத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்4 March 2021 10:16 AM GMT (Updated: 4 March 2021 10:16 AM GMT)
சங்கராபரணி ஆற்றில் மினி வேனில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று இரவு வில்லியனூர் மெயின் ரோடு குண்டு சாலை சந்திப்பில் ரோந்து பணிமேற்கொண்டனர். அங்குள்ள மூகாம்பிகை நகர் அருகில் ரோந்து சென்ற போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக சென்ற மினிவேனை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த மினிவேனில் ஆற்றுமணல் நிரப்பப்பட்டு இருந்தது. இதையடுத்து மினிவேனை ஓட்டி வந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் வில்லியனூர் உத்திர வாகினிபேட் மேட்டுத் தெருவை சேர்ந்த ஜனார்த்தனன் (வயது35) என்பதும் இவருக்கு சொந்தமான மினிவேனில் சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஜனார்த்தனனை கைது செய்த போலீசார் மணல் ஏற்றி வந்த மினி வேனை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X