search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சங்கராபரணி ஆற்றில் மினி வேனில் மணல் கடத்திய வாலிபர் கைது

    சங்கராபரணி ஆற்றில் மினி வேனில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று இரவு வில்லியனூர் மெயின் ரோடு குண்டு சாலை சந்திப்பில் ரோந்து பணிமேற்கொண்டனர். அங்குள்ள மூகாம்பிகை நகர் அருகில் ரோந்து சென்ற போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக சென்ற மினிவேனை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த மினிவேனில் ஆற்றுமணல் நிரப்பப்பட்டு இருந்தது. இதையடுத்து மினிவேனை ஓட்டி வந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் வில்லியனூர் உத்திர வாகினிபேட் மேட்டுத் தெருவை சேர்ந்த ஜனார்த்தனன் (வயது35) என்பதும் இவருக்கு சொந்தமான மினிவேனில் சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ஜனார்த்தனனை கைது செய்த போலீசார் மணல் ஏற்றி வந்த மினி வேனை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×