search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தாளமுத்துநகர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

    தாளமுத்துநகர் அருகே கடன் தொல்லையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் மாதாநகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 44). தச்சு தொழிலாளியான இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டார். இதனால் மனம் உடைந்த ராமமூர்த்தி தாளமுத்துநகர் மொட்டைகோபுரம் கடற்கரை பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×