search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    சிவகாசி அருகே டிராக்டர் மோதி வாலிபர் பலி

    சிவகாசி அருகே டிராக்டர் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் முத்துரிஷி (வயது 21). இவர் தனது உறவினருடன் வீட்டில் இருந்து சிவகாசிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் வரும் போது அந்த வழியாக வந்த டிராக்டர் ஒன்று முத்துரிஷி வந்த வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சண்முகசுந்தரம் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான டிராக்டரை ஓட்டி வந்த கீழதாயில்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×