என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்வி சென்ற கருஞ்சிறுத்தை- பொதுமக்கள் பீதி
Byமாலை மலர்3 March 2021 10:53 AM GMT (Updated: 3 March 2021 10:53 AM GMT)
குன்னூர் அருகே கருஞ்சிறுத்தை குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்வி சென்றது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
குன்னூர்:
குன்னூரில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் வண்டிசோலை மற்றும் அளக்கரை சாலையில் எம்குண்டு குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு சுமார் 150 குடும்பத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த குடியிருப்பை சுற்றி தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு எமகுண்டு குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டம் இருந்தது. இதுகுறித்து கட்டபெட்டு வனத்துறையினரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு கட்டிருந்த நாய் திடீரென மாயமானது. அதனை எங்கும் தேடியும் காணவில்லை.
இதனால் சந்தேகமடைந்த நாயின் உரிமையாளர் அந்த பகுதியில் ராஜேந்திரன் என்பவரின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது கருஞ்சிறுத்தை குடியிருப்புக்குள் உலா வந்ததும், பின்னர் அந்த கருஞ்சிறுத்தை நாயை கவ்வி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குடியிருப்பு பகுதிக்குள் கருஞ்சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மனித-வனவிலங்குள் மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விரைவாக வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு, கருஞ்சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
குன்னூரில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் வண்டிசோலை மற்றும் அளக்கரை சாலையில் எம்குண்டு குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு சுமார் 150 குடும்பத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த குடியிருப்பை சுற்றி தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு எமகுண்டு குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டம் இருந்தது. இதுகுறித்து கட்டபெட்டு வனத்துறையினரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு கட்டிருந்த நாய் திடீரென மாயமானது. அதனை எங்கும் தேடியும் காணவில்லை.
இதனால் சந்தேகமடைந்த நாயின் உரிமையாளர் அந்த பகுதியில் ராஜேந்திரன் என்பவரின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது கருஞ்சிறுத்தை குடியிருப்புக்குள் உலா வந்ததும், பின்னர் அந்த கருஞ்சிறுத்தை நாயை கவ்வி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குடியிருப்பு பகுதிக்குள் கருஞ்சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மனித-வனவிலங்குள் மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விரைவாக வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு, கருஞ்சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X